Vandimaadu

· Pustaka Digital Media
Libro electrónico
89
Páginas
Las calificaciones y opiniones no están verificadas. Más información

Acerca de este libro electrónico

இந்த விவசாயம் சார்ந்த முதல் தமிழ் ஹைக்கூவில் கவிஞர் உமையவன் அவர்கள் இன்றைய விவசாயத்தின் நிதர்சனத்தை படம்பிடித்துக் காட்டிவிட்டார். இவருடைய ஹைக்கூவை படித்தவர்கள் எவரும் இனி நமக்கு உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படும் என்று கவலைப்படாமல் இருக்க முடியாது. இரு சொல்லால் மூன்றடுக்காய் என்று ஹைக்கூ கவிதை அமைந்தாலும் இவ்வடிவத்திலும் கவிஞர் உமையவன் தன் சொல்லாட்சித் திறத்தால் உண்மையை படம்பிடித்துக் காட்டிவிட்டார்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று நகரத்தில் வாழ்ந்தாலும் இந்த கவிஞரின் மனம் என்னவோ இன்னும் விவசாயத்தை சுற்றியே வந்து கொண்டிருப்பது என்பது மிக திண்மாக வெளிப்படுகிறது. இன்றையக் காலக்கட்டத்தில் இம்மாதிரியான கவிதைகள் மட்டுமே சமுதாயத்தின் பெருவாரியான மக்களை குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை சென்றடைகின்றது. தமிழ் சமுதாயம் என்றைக்குமே அறிவு சார்ந்த கவிதை நூல்களை போற்றி பாதுகாத்து அவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்களை செயல்படுத்தியும் வந்திருக்கிறது. அந்த வகையில், திரு. உமையவனின் இம்முயற்சி அறிவாற்றல் நிறைந்தவர்களால் ஆராயப்பட்டு அவற்றின் உண்மைக் கருத்துக்களை செயல்படுத்த முனையும் பொழுது தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் தலை நிமிர தொடங்கும். அதற்கான முயற்சிகளை கவிதை வடிவில் எடுத்ததற்கு திரு. உமையவனுக்கு என் பாராட்டுகள்.

ம. சா. சுவாமிநாதன்

Acerca del autor

இளம் எழுத்தாளர் ப.ராமசாமி என்கிற உமையவன் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை சிறுவர் இலக்கியம், ஹைக்கூ, ஆன்மிகம், உரைநூல்கள், பதிப்பு நூல்கள் என பதினைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எழுதுவதோடு மட்டுமின்றி கவியரங்க நடுவர், பட்டிமன்ற பேச்சாளர், கருத்தரங்கம் என இலக்கிய நிகழ்வுகளிலும் தன் முத்திரையைப் படைத்து வரும் பன்முகப் படைப்பாளி.

தமிழக அரசின் 'தமிழ் செம்மல்' விருது, கம்போடியா அரசின் உலக பாரதியார் விருது உட்பட இரண்டு அரசு விருதுகளை பெற்றுள்ளார். ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா நிறுவனம் வழங்கிய "பெருமைமிகு தமிழர் விருது" (Pride of Tamilnadu - 2018) உள்ளிட்ட இருபத்தைந்திற்கும் மேற்பட்ட விருதுகளையும், பல சிறந்த நூல்களுக்கான பரிசினையும் பெற்றுள்ளார்.

சாகித்ய அகாடெமியின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாக பங்குகொண்ட ஒரே இளம் எழுத்தாளர். கலைஞர், மக்கள், பொதிகை. Z தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. அகில இந்தியா வானொலி, இணைய காணொலி போன்றவற்றிலும் பங்கு கொண்டுள்ளார்.

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இவரின் சிறுவர் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவிதைகள் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Califica este libro electrónico

Cuéntanos lo que piensas.

Información de lectura

Smartphones y tablets
Instala la app de Google Play Libros para Android y iPad/iPhone. Como se sincroniza de manera automática con tu cuenta, te permite leer en línea o sin conexión en cualquier lugar.
Laptops y computadoras
Para escuchar audiolibros adquiridos en Google Play, usa el navegador web de tu computadora.
Lectores electrónicos y otros dispositivos
Para leer en dispositivos de tinta electrónica, como los lectores de libros electrónicos Kobo, deberás descargar un archivo y transferirlo a tu dispositivo. Sigue las instrucciones detalladas que aparecen en el Centro de ayuda para transferir los archivos a lectores de libros electrónicos compatibles.