Ullangai Ariviyal

· Pustaka Digital Media
5.0
1 isibuyekezo
I-Ebook
98
Amakhasi
Izilinganiso nezibuyekezo aziqinisekisiwe  Funda Kabanzi

Mayelana nale ebook

கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகளை எடுத்துக் கூறும் இந்நூலைப் படித்துப் பார்க்கும் மகிழ்ச்சிகரமான அனுபவம் எனக்குக் கிடைத்தத்தில் பெரு மகிழ்வு கொண்டேன். நூலின் தலைப்பு பற்றிய விஷயத்தில் நான் ஒரு கற்றுக்குட்டி என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்வதானால் நான் கைரேகை பார்த்துப் பலன் கூற வேண்டி எந்தக் கைரேகை நிபுணரிடமும் எனது உள்ளங்கையை நீட்டியதில்லை. நூலை எழுதிய ஆசிரியர் மிகவும் அக்கறையோடு இதிலடங்கியுள்ள விவரங்களை எழுதியுள்ளார். கைரேகை ஜோஸ்யம் ஒரு மூடநம்பிக்கை என்று இன்றைய புதிய தலைமுறையாளர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புக் கூறி வரும் நேரத்தில், இந்த இளம் எழுத்தாளர் புராதனப் பொக்கிஷம் எனப் போற்ற வேண்டிய இத்துறையில், இதன் அறிவியல் பாதையை வெகு ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துக் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

மனிதர்களுடைய கைரேகை, உள்ளங்கையின் நிற வாகுகள் இவற்றிலிருந்து விரிவாகக் கூறத் துவங்கி அவற்றின் பலாபலன்களை எடுத்துக் கூறியுள்ள விதம் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்வதாகவே அமைந்துள்ளது கண்கூடு. கூறியுள்ளவற்றைப் படவிளக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கே. இத்துறை பற்றிய ஞானம் ஓரளவு உடனடியாக ஏற்படும் அளவுக்கு உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

உள்ளங்கை ரேகைகளோடு மட்டுமின்றி கட்டை விரல் மற்ற விரல்களின் தன்மைகளையும் விவரித்துள்ளார். எந்த வகையான விரல்கள் என்னென்ன குணவிசேஷம் கொண்டவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

கைரேகை சாஸ்திரம் பற்றிய மாதிரி அட்டவணை ஒன்றையும் தந்து இந்நூலை முடித்துள்ளார் இதன் ஆசிரியர். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைரேகை பற்றி அந்த வயதிலேயே தெரிந்து கொள்ளாமலிருப்பது நலம் என்று கருதுகிறேன். ஏனெனில் உள்ளங்கை ரேகைகள் இந்த வயதிற்குப் பிறகுதான் ஒழுங்காக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகள் புத்தகம் கருத்துக் குவியல்களடங்கிய ஒரு அரிய புத்தகம். இதற்கான ஆய்வினை மேற்கொண்ட போது இந்த ஆசிரியர் திரு. கே.பத்மநாபன் எந்த அளவு கடின உழைப்பை அதற்காக நல்கியிருப்பார் என்று தெரிய வருகையில் அவரது பூரண ஈடுபாட்டினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆசிரியரை வாழ்த்த எண்ணி எனது உள்ளங்கையை நான் உயர்த்தினாலே அது அரசியல் கலந்ததாக ஆகிவிடுமென்பதால் எனது கட்டை விரலை வெற்றிப் பாணியில் வளைத்து மட்டும் வாழ்த்துகிறேன்.

- ராம்ஜி (அபஸ்வரம்)

Izilinganiso nezibuyekezo

5.0
1 isibuyekezo

Mayelana nomlobi

கௌசிக கோத்திரம், ஸ்ரீ வைஷண்வ சம்பிரதாயத்தில், ஆசாரியன் தூப்புல் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் வம்சாவெளியில், வடகலை வரிசையில், வந்த ஸ்ரீமான் ரகுநாதன்-செண்பகவல்லி தம்பதியரின், மகன் ஸ்ரீநரசிம்மன்-ருக்மணி தம்பதியரின் மகனான ஸ்ரீநிவாசசாரியார்-ரெங்கநாயகிக்கு எட்டவாது மகனாக பிறந்தவர் தான் எனது தந்தை சீனி. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்.

1961-ஆம் வருஷம் என் தாய் இந்திராவை திருமணம் செய்து கொண்டு, 1964-ஆம் ஆண்டு அக்டேபர் மாதம் 12-ஆம் தேதி அடியேன் காலை 4-30 மணிக்கு அவர்களுக்கு மகனாகப் பிறந்தேன்.

காலம் சென்ற எனது தாத்தா ஸ்ரீநிவாசசாரியார் 1930 களில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், வடக்கு சித்திரை வீதியில், சொந்தமாக இருந்த வீட்டின் வாயிலில் தினமும் “தங்கரத” (Golden Chariot) வண்டி வந்து, குதிரைகள் பூட்டி, அவரை அரசு பணிக்கு அழைத்துச் செல்வார்கள் என என் தந்தையார் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். என் தாத்தா அதில அரசின் “சர்கின் இன்ஸ்பெக்டர்” பணியில் இருந்தமையால் இப்படிப்பட்ட வாய்ப்பினை பெற்றார்.

இவ்வாறு ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட என் தந்தை, “திருநாடு அலங்கரித்த வர்த்தமான ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமி அவர்களின் அரவணைப்பில் பல ஆண்டுகள் இருந்து, தமிழாசிரியராக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது இறப்பிற்கு பிறகு (15-05-2008) அவர் தொடங்கிய “ஜெயதாரிணி அறக்கட்டளை” தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஏற்கெனவே என் தாயாரின் இறப்பால் (03-06-2007) மனம் வாடிய என் தந்தை, தனது பெரிய மகளை என் பொறுப்பில் விட்டுவிட்டார்.

இப்போது என் மூத்த சகோதரி அரசு வழங்கும் ஓய்வு ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு என்னுடைய ஆதரவில் இருக்கிறாள். இப்படி என் சகோதரியையும் பேணிக் காத்துக் கொண்டு, என் மனைவி பத்மஜா, என் மகள் தாரிணிக்கும் குடும்பத் தலைவனாக இருந்து வருகிறேன்.

B.Sc. தாவரவியல் படித்த பின், The Hindu ஆங்கிலப் பத்திரிகையில் 27 ஆண்டுகள் பணி புரிந்து பின்னர் 01- 06-2015 ஆம் நாள் அன்று “விருப்ப பணி ஓய்வு” (VRS) பெற்றேன். 30 வருட காலமாக “கைரேகை” பற்றிய ஆராய்ச்சியில் என்னை அர்ப்பணித்து கொண்டு, பலருக்கு கைரேகைப் பார்த்து துல்லியமான, பலன்களைச் சொல்லி, அவர்களை நெறிபடுத்தும் வாய்பையும் பெற்றுள்ளேன்.

அருந்தமிழ், ஆன்மீகம், ஆலயம் என மூன்றுடன் இணைந்து, சமூகப் பணிகள் செய்து வருகிறேன். கவிதை, கட்டுரைகள், தொடர் நிகழ்ச்சிகள், வானொலி, தொலைக்காட்சி என அமைப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். தற்போது “கைரேகை திலகம்” என்னும் விருதினைப் பெற்று என் மன வைரத்தை மேலும் பட்டைத்தீட்டி வருகிறேன்.

Nikeza le ebook isilinganiso

Sitshele ukuthi ucabangani.

Ulwazi lokufunda

Amasmathifoni namathebulethi
Faka uhlelo lokusebenza lwe-Google Play Amabhuku lwe-Android ne-iPad/iPhone. Livunyelaniswa ngokuzenzakalela ne-akhawunti yakho liphinde likuvumele ukuthi ufunde uxhunywe ku-inthanethi noma ungaxhunyiwe noma ngabe ukuphi.
Amakhompyutha aphathekayo namakhompyutha
Ungalalela ama-audiobook athengwe ku-Google Play usebenzisa isiphequluli sewebhu sekhompuyutha yakho.
Ama-eReaders namanye amadivayisi
Ukuze ufunde kumadivayisi e-e-ink afana ne-Kobo eReaders, uzodinga ukudawuniloda ifayela futhi ulidlulisele kudivayisi yakho. Landela imiyalelo Yesikhungo Sosizo eningiliziwe ukuze udlulise amafayela kuma-eReader asekelwayo.