இங்ஙனம், N. நடராஜன்
ஜோதிடத் துறையில் மரபு ஜோதிடம் K.P. சிஷ்டம் - மற்றும் விசித்திர ஜோதிட முறை இவற்றில் நன்கு அனுபவம் பெற்றவர் - 40 வருடங்களாக ஜோதிடத் தொழில் புரிந்த அனுபவம் பெற்றவர் புதுமையான முறையில் இன்றைய ஜெனரேசனுக்கு ஏற்ப அற்புதமான பலன்களை சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் கண்டுபிடிப்புகள் போல பல கோணத்திலும் ஆராய்ந்து துல்லியமான பலன் சொல்வதில் தேர்ச்சி உள்ளவர்.
நவ இந்தியா என்ற தினசரி நாளிதழில் சுமார் 4 ஆண்டு காலம் வரையில் வாரா வாரம் ஜோதிடர் கேள்வி பதில் பகுதியில் எழுதி வந்தவர். ஜோதிடக் கடல் என்ற பத்திரிக்கையில் பல்வேறு கட்டுரைகள் எழுதி வந்தவர். அமெரிக்கா போன்ற நாட்டில் இந்தியர்களுக்கு போன் மூலம் மற்றும் FAX மூலம், E மெயில் மூலம் பலன் அனுப்பி புகழ் பெற்றவர். ஜோதிடம் பார்க்கும்போது சம்பவங்கள் நடப்பதற்கு வேண்டிய சாட்சிகள் போல சிறுசிறு குறிப்புகள் சொல்லி ஆச்சரியப்படுத்துபவர். ஒரே நபருக்கு 6 மாதங்கள் வரை 180 நாட்கள் வரை தினப் பலன்போல் பார்த்து 500 கேள்வித் தொகுப்புகள் உருவாக்கியவர். விசித்திர ஜோதிட முறை என்னும் V.J. சிஷ்டம் என்று ஒரு தியரியை உருவாக்கி ஜோதிடம் பார்ப்பவர். வாரியார் சுவாமிகளால் பொன்னாடை சாத்தப்பட்டு விசித்திர ஜோதிட வித்யா நிதி என்று பட்டம் பெற்றவர்.