Thuvanthuva Yutham

· Pustaka Digital Media
E-စာအုပ်
101
မျက်နှာ
အဆင့်သတ်မှတ်ချက်နှင့် သုံးသပ်ချက်များကို အတည်ပြုမထားပါ  ပိုမိုလေ့လာရန်

ဤ E-စာအုပ်အကြောင်း

கவிஞர் மீரா, எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி இருவரும் இவரின் கலை இலக்கிய பயணத்தை துவக்கி வைத்தவர்கள். இவரது புத்தகத்தை பாராட்டி கவிஞர் தமிழச்சிதங்கப்பாண்டியன், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் மீரா ஆகியோர் குறிப்பிட்டிருப்பதை வாழ்வின் சிலிர்ப்பான தருணங்கள் என பதிவு செய்கிறார்.

ஏழு குறுநாவல்கள் எழுதியிருக்கிறார். சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் என்கிற நூலை எழுதியிருக்கிறார். இவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ‘தி. குலசேகர் கதைகள் என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரது கதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவரின் சிறுகதைகள்டி.வி.ஆர் நினைவு இலக்கியம், நீலமலை தமிழ்ச்சங்கம், லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியம் போன்ற விருதுகள் பெற்றிருக்கிறது. ஜே.சி இயக்கம் ‘ரைசிங் ஸ்டார் என்கிற விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. புதிய முயற்சியாக உலகின் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இங்கே நாவல் வடிவில் ‘ட்ரான்ஸ் கிரியேட்டிவ்’ வகை இலக்கியமாக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக ‘உலக சினிமா என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார். சந்தோஷ்சிவனின் மல்லி, டெரரிஸ்ட் படங்களுக்கு எழுத்து வடிவம் தந்து நூலாக்கியிருக்கிறார்.

ரேவதி நடித்து, இயக்கிய டெலிஃபில்ம்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். சில தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரப்படத்திலும் எப்பிசோட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறார். கவிஞர் லீலாமணிமேகலையிடம் தமிழக பழங்குடியினர் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். நீ+நீ=நாம் என்கிற குறும் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

இயக்குநர் ரா.பார்த்திபனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். திரைமொழியின் மீதுள்ள தீராத காதலினால் உயிர்த்திருக்க முடிந்திருப்பதையே தனக்கான தவமும்வரமும் என்கிறார்.

စာရေးသူအကြောင်း

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ဤ E-စာအုပ်ကို အဆင့်သတ်မှတ်ပါ

သင့်အမြင်ကို ပြောပြပါ။

သတင်းအချက်အလက် ဖတ်နေသည်

စမတ်ဖုန်းများနှင့် တက်ဘလက်များ
Android နှင့် iPad/iPhone တို့အတွက် Google Play Books အက်ပ် ကို ထည့်သွင်းပါ။ ၎င်းသည် သင့်အကောင့်နှင့် အလိုအလျောက် စင့်ခ်လုပ်ပေးပြီး နေရာမရွေး အွန်လိုင်းတွင်ဖြစ်စေ သို့မဟုတ် အော့ဖ်လိုင်းတွင်ဖြစ်စေ ဖတ်ရှုခွင့်ရရှိစေပါသည်။
လက်တော့ပ်များနှင့် ကွန်ပျူတာများ
Google Play မှတစ်ဆင့် ဝယ်ယူထားသော အော်ဒီယိုစာအုပ်များအား သင့်ကွန်ပျူတာ၏ ဝဘ်ဘရောင်ဇာကို အသုံးပြု၍ နားဆင်နိုင်ပါသည်။
eReaders နှင့် အခြားကိရိယာများ
Kobo eReader များကဲ့သို့ e-ink စက်ပစ္စည်းပေါ်တွင် ဖတ်ရှုရန် ဖိုင်ကို ဒေါင်းလုဒ်လုပ်ပြီး သင့်စက်ထဲသို့ လွှဲပြောင်းပေးရမည်။ ထောက်ပံ့ထားသည့် eReader များသို့ ဖိုင်များကို လွှဲပြောင်းရန် ကူညီရေးဌာန အသေးစိတ် ညွှန်ကြားချက်များအတိုင်း လုပ်ဆောင်ပါ။