இங்கே சுவர் ஒரு குறியீடு. அதை உள்வாங்கிக்கொள்வதென்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது. மனிதத்தை தொட விடாமல் மனிதர்களை சாதி, மதம், நிறம், மொழி, இனம், நாடு, பணம், அகங்காரம், ஆணவம், வக்கிரம், சுயநலம், வன்மம் என எத்தனைஎத்தனையோ சுவர்கள் இங்கே நிறுவப்பட்டிருக்கின்றன.
காதலின் தடையாய் இங்கே எழும்பி நிற்கிற அந்த சுவரையே தங்களின் ஈரங்களால் கசிந்து ஊடுறுவச்செய்து தங்களின் புனிதமான காதலுக்கான ஆயுதமாக அவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள். அங்கே மனதை தடை கடந்து தடையற்று பரஸ்பரம் பார்த்துக் கொள்கிற நுட்பம் காதலின் மந்திரத்தால் சாத்தியப்படுகிறது.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.