30 வருடங்களாக ஜோதிடத்துறையில் தனது பணியினை செய்துவரும் K.B.ஹரிபிரசாத் சர்மா விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பாரம்பரியம் மிக்க ஜோதிடக்குடும்பத்தில் பிறந்தவர். பஞ்சாங்க ஐயர் வீடு என்ற பெயர் பெற்ற பரம்பரையில் பிறந்து தனது குலத்தொழிலோடு கல்லூரிப் படிப்பையும் மேற்கொண்டவர். ஜோதிடம் என்பதை பிறவிஞானமாகப் பெற்றிருந்தாலும் அதனை முறையாகக் கற்க வேண்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Diploma in Astrology, அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஙி.கி., B.A., Astrology படித்து பட்டம் பெற்றார். ஜோதிடம் என்பது அறிவியல் பாடம்தான் என்ற அங்கீகாரத்தை ஹிநிசி அளித்ததும் கோயமுத்தூர் கற்பகம் பல்கலைக்கழகத்தில் M.Sc., Applied Astrology முதுகலைப் பட்டம் பெற்றார். ஜோதிடம் மட்டுமல்லாது, M.A., வரலாறு பட்டமும் பெற்றிருக்கிறார்.
ஜோதிடம் என்பது அடிப்படையில் அறிவியல் சம்பந்தமானதே, ஆன்மிக நம்பிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக அணுகினால் மனிதன் தனக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என்பது இவரது அசைக்கமுடியாத வாதம். ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை அல்ல, வானில் சுழலும் கிரஹங்களே மனிதனின் வாழ்வியல் நடைமுறையை தீர்மானிக்கின்றன. அதனைப் புரிந்துகொண்டால் எல்லா பிரச்சினைகளையும் எளிதாகக் கடந்து செல்ல முடியும் என்பதே இவர் சொல்லும் தீர்வு.