இந்தத் தலத்தைப்பற்றிய பெருமைகளைக் கச்சியப்ப முனிவர் தாம் இயற்றிய பேரூர்த்தல புராணத்தில் இரண்டு படலங்களில் கூறுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றுவகைச் சிறப்பும் ஒருங்கே பொருந்தியுள்ள இத்தலத்திற்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒன்று உண்டு. இவற்றையன்றி வேறு புலவர் பெருமக்கள் இத்தல சம்பந்தமாகப் பிரபந்தங்களையும் பாடல்களையும் இயற்றியிருக்கிறார்கள்.