நம் ஜாதகங்களில் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று ஜாதகக் குறிப்புகள் காட்டுகின்றன. கிரகக் கோளறு ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறோம். பயமே வேண்டாம். நம் வீட்டிற்கு வருபவரை கண்டு கொள்ளாமல் இருந்தால் அவருக்கு கோபம் வராதா? அதே போல் தான் நவகிரகங்களும் நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள்.
“வாருங்கள்” என்று அழைத்து அவரை உபசரித்தால் ஏன் படுத்தப் போகிறார்? அர்ச்சனை, நைவேத்யம், பாடல்கள் மூலம் மனம் குளிர வைக்கலாம். நவகிரகங்கள் புத்தகத்தில் ஒன்பது நவகிரகங்களின் வரலாறும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிவனடியார்களின் நண்பர்கள் தான் நவகிரகங்கள்.
அன்புடன் , லட்சுமி ராஜரத்னம்