Ippadithan Ezhutha Aarambitharkal

· Pustaka Digital Media
Ebook
99
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

தொடர்ந்து வாஞ்சையோடு புத்தகங்களை வாசிக்கிற வாசகனுக்குள் எழுத வேண்டும் என்கிற வேட்கை உண்டாகும். புத்தகப் புழுவாய் ஆரம்பித்து வண்ணத்துப் பூச்சியாக மனம் மிளிர்கிற ஓர் பருவத்தை எழுத்தாளர் என்று சொல்லலாம் ஒவ்வொரு எழுத்தாளர்களும் எப்படி எழுத ஆரம்பித்தார்கள் என்பதனையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் ஒரு டைரியாக இரத்தின சுருக்கமாக வருங்கால தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் கைகளில் இருந்தால் நன்றாக இருக்கும் என எனக்குள் ஏற்பட்ட ஆர்வத்தினால் கிடைத்த தகவல்களை தொகுத்து அளித்திருக்கிறேன். இந்த புத்தகம் ஒவ்வொரு வாசகர்களின் அலமாரிகளிலும் எழுத்தாளர் கைகளிலும் தவழ்ந்தால் அது என் மனதுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும்.

About the author

கவிமுகில் சுரேஷ் என்கிற பெயரில் தர்மபுரியில் இருந்து வருகிறேன். எம்.ஏ.(சமூகவியல்) மற்றும் B.L.Isc(நூலகவியல்) படித்து பட்டம் பெற்றேன். இருபத்தி இரண்டு வருடங்களாக சமூக நிறுவனங்களில் மேலாளராக பணியாற்றி வந்திருக்கிறேன். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு சமூக தொண்டாற்றி உள்ளேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவது என ஆரம்பித்து பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறேன். இது வரை வெளியான புத்தகங்கள்:
1.மண்மீதில் விண்மீன்கள் (கட்டுரை)
2.மறக்கமுடியாத முகவரிகள் (கவிதை)
3.ஜீவநதியின் ஓடங்கள் (கவிதை)
4.உடைக்கும் உளிகள் (கவிதை)
5.கண்ணான கண்ணே (நாவல்) தேவியின் கண்மணியில் என்னுடைய முதல் நாவல்
இது தவிர சங்கவி பதிப்பகத்தின் மூலம் என்னுடைய "மறக்க முடியாத முகவரிகள்" கவித் தொகுப்பு வெளியானது

தற்பொழுது "கண்ணாடி மீன்கள்" எனும் சிறுகதைத் தொகுப்பு பரிதி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது.

இதுவரை கண்ணதாசன் விருது, சமூகப் பணிக்காக அப்துல்கலாம் விருது,கவிமுகில் விருது, கவித்திலகம் விருது,கவிமுரசு விருது, தர்ஷினியின் சிறுகதை செம்மல் விருது, காந்தி விருது, பாரதி விருது, திருவள்ளுவர் விருது,Icon தகடூர் விருது, என 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறேன்.

தொடர்ந்து வார இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். இப்பொழுது தொடர்ந்து எழுத்துப்பணியில் இயங்கி வருகிறேன் நான் எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தருவது என் அருமை மனைவி சலோமி சங்கீதா. எனக்கு இரு பிள்ளைகள் ஜாஸ்மின், ஜோஷ்வா. தர்மபுரி சி.சுரேஷ் எனும் பெயரிலும், கவிமுகில் சுரேஷ் என்னும் பெயரிலும் படைப்புகளை படைத்து வருகிறேன்.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.