விக்ரம்... யாருமற்ற தனிமரமாய் வாழ்ந்து வருபவன்... அவனது வாழ்க்கைக்குள் அதிரடியாக நுழையும் ஆதிரா. தன் நேசத்தை தயக்கமே இன்றி அவனிடம் உரைக்க, தன் நிலையை எண்ணி அவள் நேசத்தை தவிர்க்கும் நாயகன்.
ஆனால், தன் நேசத்துக்காக விடாமல் போராடும் நாயகி. இவர்களின் காதலுக்கு தடையாக ஜாதி, மதம் என அனைத்தும் குறுக்கே நிற்க, தன் வாழ்க்கையின் ஒரே பிடிப்பான உறவை (ஆதிராவை) விட்டுக்கொடுக்கவே முடியாத நிலையில் தவிக்கும் விக்ரம்.
விக்ரமுக்கும் அவனது நண்பன் வருணுக்கும் இடையே இருக்கும் நட்பு. பெரும் தொழிலதிபனான வருணுக்கும், விக்ரமுக்குமான நட்பு எந்த புள்ளியில் துவங்கியது? அவர்களது நட்பு இவ்வளவு இறுக காரணமான இருந்த நிகழ்வுகள் என்ன? இவர்களின் நட்பை வருணின் மனைவி சரியாக புரிந்து கொண்டாளா?
விக்ரம் மற்றும் ஆதிராவின் திருமணம் நடந்ததா? எப்படி நடந்தது? அதற்கு காரணமானவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு விடையை இந்த கதைக்குள் தேடலாம்.