இதில் எது உண்மையான அன்பு, எது வெளிவேஷம்?
நக்ஷத்ராவின் நாயகனாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவன் யார்? நாயகனின் வீட்டார் நக்ஷத்ராவை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்களா? காதலை ஏற்றுக்கொள்வதில் குழப்பங்கள் தான் என்ன?
கல்லூரிக் கலாட்டாக்களும், இனிமையான காதலும் இழைந்தோடும் துள்ளலான கதை.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.