Ashokamithiranukku Oru Anjali

· Pustaka Digital Media
eBook
54
หน้า
คะแนนและรีวิวไม่ได้รับการตรวจสอบยืนยัน  ดูข้อมูลเพิ่มเติม

เกี่ยวกับ eBook เล่มนี้

அசோகமித்திரனை ஆயுளுக்கும் படிக்கலாம். நெஞ்சில் கருணை, இரக்கம், அன்பு தயாள குணம் என்று உள்ளவர்கள் கண்டிப்பாக அவரைத் தவிர்க்க முடியாது. தவிர்க்கக் கூடாது. வெறுமே கதை என்று பேர்பண்ணி வாசித்து நகர்வதில்லை அவர் படைப்புக்கள். அது நம் மனதுக்குள் புகுந்து நம்மை ஆட்டி வைத்து விடும். இத்தனைக்கும் மிக எளிய எழுத்து அவருடையது. இத்தனை இயல்பாய், யதார்த்தமாய் ஒரு மனிதனால் எழுத முடியுமா? இந்த அளவுக்கு எந்த அலங்காரமுமின்றி ஒரு விஷயத்தை ஆழப் பதிவதுபோல் ஒரு படைப்பாளியால் சொல்லிவிட முடியுமா? என்கிற ஐயம் நம் மனதிற்குள் அவரைப் படிக்கும்போதெல்லாம் கூடவே ஓடிக் கொண்டிருக்கும். அவரது “தண்ணீர்” நாவலொன்றே போதும். ஒரு முறை மட்டும் படித்து ஒதுக்கும் படைப்பு அல்ல அது. அவ்வப்போது படித்துக்கொண்டேயிருக்கச் சொல்லும். அதில் வரும் பாத்திரங்கள் நம்மை என்னவோ செய்து கொண்டேயிருக்கும். ஐயோ இவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று வேதனை கொள்ள வைக்கும். அம்மாதிரி மனிதர்களைப் பார்க்கும்போது நம்மையறியாமல் உதவி செய்யும் மனசை உண்டாக்கும். உலகின் மிகச் சிறந்த பத்து நாவல்களில் “தண்ணீர்“ நாவலும் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். இந்நூலில் அவரது சில படைப்புக்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் என்னைப் பாடாய்ப்படுத்தியவை என்பது மட்டும் உறுதி. குறிப்பாக “புண் உமிழ் குருதி”

เกี่ยวกับผู้แต่ง

1987 முதல் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உள்ளே வெளியே, பார்வைகள், நேசம், சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை, திரை விலகல், நினைவுத் தடங்கள், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நான் அதுவல்ல, தவிக்கும் இடைவெளிகள்,வெள்ளை நிறத்தொரு பூனை, செய்வினை-செயப்பாட்டு வினை, நிலைத்தல், முழு மனிதன், பின்னோக்கி எழும் அதிர்வுகள், சில யதார்த்தங்கள் வனம் புகுதல், தனித்த பறவையின் சலனங்கள் ஆகிய 18 சிறுகதைத் தொகுப்புகளும், புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள், உஷாதீபன் குறுநாவல்கள், கால்விலங்கு, துருவங்கள், எதிர்காற்று ஆகிய ஆறு குறுநாவல் தொகுப்புகளும், லட்சியப் பறவைகள் என்ற சமூக நாவலும், நின்று ஒளிரும் சுடர்கள்,காலத்தால் அழியாக் கலைஞர்கள் என்கிற தமிழ்த் திரைப்படக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்,மற்றும் நகைச்சுவைக் கலைஞர்கள் பற்றிய உரைநடைச் சித்திரக் கட்டுரைத் தொகுப்பும், உறங்காக் கடல், படித்தேன்எழுதுகிறேன், பொங்குமாங்கடல் ஆகிய மூன்று இலக்கியக் கட்டுரைத் தொகுப்பும், இவை போக 30 மின் நூல்களும், புஸ்தகா.கோ.இன்-ல் நாவல்களும், சிறுகதைகளும் ஆக இருபது நூல்களும் இதுவரை வெளி வந்துள்ளன.

சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதையாக (1987) இவரது வெள்ளை நிறத்தொரு பூனை மற்றும் 2015 டிசம்பர் மாதச் சிறுகதையாக “கைமாத்து” என்ற சிறுகதையும் பரிசு பெற்றுள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளைய தலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழாக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகியன இவர் பெற்ற பரிசுகள்.

2007-ம் ஆண்டுக்கான அமரர் ஜீவா – பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழா திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியன இணைந்து நடத்திய விழாவில் இவரது “வாழ்க்கை ஒரு ஜீவநதி” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றது. இத்தொகுதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நவீன கலை இலக்கியப் பயில் நூலாக அமைந்தது. இவரது சிறுகதைத் தொகுதிகள் பல கல்லூரிகளில் மாணவர்களால் M.Phil., P.Hd., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி கதிரில் வந்து கொண்டேயிருக்கும் இவரது கதைகள் “கதிர் கதைகள்” என்கிற வரிசையில் ஆய்வு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கியப் போட்டி 2011 ல் இவரது “நினைவுத் தடங்கள்” சிறுகதைத் தொகுதி அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்றது. நெய்வேலி புத்தகக் கண்காட்சி மற்றும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக் குழு நடத்திய சிறுகதைப் போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2014 – இவரது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பிற்குக் கிடைத்தது.

இவரது எழுத்துப்பணி வார மாத இணைய இதழ்களில் இன்றும் விடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ให้คะแนน eBook นี้

แสดงความเห็นของคุณให้เรารับรู้

ข้อมูลในการอ่าน

สมาร์ทโฟนและแท็บเล็ต
ติดตั้งแอป Google Play Books สำหรับ Android และ iPad/iPhone แอปจะซิงค์โดยอัตโนมัติกับบัญชีของคุณ และช่วยให้คุณอ่านแบบออนไลน์หรือออฟไลน์ได้ทุกที่
แล็ปท็อปและคอมพิวเตอร์
คุณฟังหนังสือเสียงที่ซื้อจาก Google Play โดยใช้เว็บเบราว์เซอร์ในคอมพิวเตอร์ได้
eReader และอุปกรณ์อื่นๆ
หากต้องการอ่านบนอุปกรณ์ e-ink เช่น Kobo eReader คุณจะต้องดาวน์โหลดและโอนไฟล์ไปยังอุปกรณ์ของคุณ โปรดทำตามวิธีการอย่างละเอียดในศูนย์ช่วยเหลือเพื่อโอนไฟล์ไปยัง eReader ที่รองรับ