இந்நூல் குறிப்பாக மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல் என்றால் மிகை ஆகாது. இந்நூலில் தமிழ் இலக்கியத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், வெறும் வினா-விடை என்பதில் இருந்து மாறுபட்டு குறிப்பிட்ட வினா-விடை தொடர்புடைய விளக்கமும் இடம் பெறுகிறது. இந்நூலை முழுமையாக படிக்கும் ஒருவர் ஐம்பெரும் காப்பியங்களின் கதைச் சுருக்கத்தை படித்த பயனை அடைவார் என்பதில் ஐயம் இல்லை.
கவி. செங்குட்டுவன் என்கிற புனைப் பெயரில் எழுதி வரும் திரு. செ. இராஜேந்திரன் என்பவர் அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம். பெற்றவர். தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகத்சி, நாடகம், ஆய்வுக் கடுரைகள் எழுதுதல் உள்ளிட்ட பன்முகத்திறமை கொண்டவர். தற்போது பட்டினித் தடாகத்து பாசமலர்கள், வேரில் பழுத்த பலா ஆகிய கவிதை நூல்களையும், ஐம்பெரும் காப்பியங்கள் வினா - விடை விளக்கம் எனும் நூலையும் வெளியிட்டுள்ளார். பட்டிமன்றம், கவியரங்கம், தமிழ் கணினி பயிலரங்கங்கள், என நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டவர்.