நாயகன் : நீலன். நாயகி : பொற்சுவை. பழங்குடியின கிராமத்தில், பெரும் கட்டுப்பாடுகளுக்கு நடுவில், உலகில் இருந்து தனித்து வாழும் நாயகி. அந்த கிராமத்தை முன்னேற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தோடு, அரசாங்க உதவியோடு அவர்கள் கிராமத்துக்கு வரும் நாயகன். இருவரும் சந்தித்து காதலில் விழ, அவளை அடைய வேண்டி அவர்களது கிராமத்து வீர விளையாட்டு துவங்கி, அனைத்தையும் செய்து வெல்லும் நாயகன். இறுதியில் அவர்களது பாரம்பரிய கட்டுப்பாட்டில் சிக்கிக் கொள்ள, இருவரும் இணைந்தார்களா? நாயகியின் கிராமத்தை முன்னேற்ற வந்த நாயகன், தன் லட்சியத்தில் வென்றானா? அவர்களது கிராம மக்கள் வெளிச்சத்துக்கு வந்தார்களா? இவர்களது நிலை என்ன? இவற்றை எல்லாம் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் "மகரந்தப் பூக்கள்".